2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வாக்காளர்களுக்கான விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு விடுமுறை வழங்கவேண்டியதன் அவசியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை இழப்பின்றி தமது வாக்கினை செலுத்துவதற்கு ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என,  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சில வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று திரும்ப மூன்று நாட்கள் தேவைப்படும் நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அவசியம் கருதி தேவையான விடுமுறை வழங்குவது குறித்த நிறுவனங்களின் கடப்பாடு என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X