Simrith / 2023 ஜூலை 02 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (30) குறித்த வியாபாரியின் கடைக்கு பழம் வாங்கச் சென்ற பெண்ணிடம் வியாபாரி தகாத வார்த்தை பேசினார். அதைக் கண்டித்தவரை கழுத்தில் கத்தியை வைத்து அவர் மிரட்டியதால் , பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரை கடத்திச் சென்றவர்கள் அவரை உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் அதை காணொளியாக பதிவு செய்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த வியாபாரி அங்கிருந்து தப்பி சென்று
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (01) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago