2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

’’விபச்சாரிகளுக்கு அவமானம்’’

Editorial   / 2024 ஜனவரி 19 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைக்கு பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதே தற்போதைய தேவை என அமைச்சர் வலியுறுத்துகிறார். அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  அமைச்சர் மேலும் கூறியதாவது:

 கேள்வி - இன்றைய கலந்துரையாடல்  பற்றி கூறுவீர்களா?

பதில் - கொவிட் தொற்றுநோய் மற்றும் போராட்டம் காரணமாக, எங்களால் அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால், தற்போதைய ஜனாதிபதி வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது அபிவிருத்தியை கிராமத்திற்கு கொண்டு செல்லும் படி கூறினார். பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவுகளும்ம்  3-4 மில்லியன் ரூபாவை அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பெறுகின்றன.

கேள்வி - எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடைபெறவுள்ளது? 

பதில் - அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும். ஆனால் ஜனாதிபதியால் பொதுத் தேர்தலையும் நடத்த முடியும். அதற்கு நிறைய காலம் உள்ளது, ஆனால், நாங்கள் அபிவிருத்தித் திட்டத்தில் கவனம் செலுத்துகிறோம்.

கேள்வி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலை எதிர்பார்க்கிறது?

 பதில் -  மொட்டு என்பது கிராம மட்டத்திலிருந்து மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கட்சி. நாங்கள் அலைகளுக்குப் பின்னால் போக மாட்டோம். எனவே எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி - ஆனால் மொட்டிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என நாங்கள் நினைக்கின்றோம்? 

பதில் - எங்கள் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். ஜனாதிபதி வேட்பாளருடன் சேர்ந்து தீர்மானங்களை எடுக்கும் கட்சியாகும். போரில் வெற்றி பெற்று நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தோம். நல்லாட்சியை ஏற்படுத்தவே மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டார். தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த சவாலை முறியடிக்க தற்போதைய ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டோம். ஆனால் இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருக்கிறோம். இந்த நெருக்கடி ஏற்படும் போது மற்ற அனைத்தும் மறைக்கப்பட்டன.

கேள்வி - அப்படியென்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிறீர்களா? 

பதில் – ஆம், இப்போது பொருளாதாரத்தை சரிசெய்து நாட்டை ஸ்திரப்படுத்தக் கூடிய ஒரு தலைவரை கொண்டு வர வேண்டும். திருடர்களை பிடிப்பதாக வாய்ப் பேச்சுபேசும் தலைவர்களால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது. அறிவார்ந்த மக்கள் இந்நிலையைப் புரிந்து கொண்டுள்ளனர்.

கேள்வி - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி வேட்புமனு வழங்கப்பட வேண்டுமென கருத்து வெளியிடப்பட்டுள்ளதா? 

பதில் - இல்லை... அவர் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும். மொட்டு ஆதரிக்கும் வேட்பாளர் இந்நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார்.

கேள்வி - தற்போது ஜே.வி.பி.  வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிகிறது. அது அச்சுறுத்தல் இல்லையா? 

பதில் - அவர்களால் முகநூலில் மட்டும்தான் ஜனாதிபதியாக முடியும். கிராம அளவில் அவர்களுக்கு கிளை அமைப்பு இல்லை. திட்டங்கள் இல்லை. மூன்று சதவீதத்தை 1500 சதவீதமாக அதிகரிப்பது எப்படி?. ஜே.வி.பி அலை உடைந்து கொண்டே போகிறது. அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவுஜீவிகள் அதை புரிந்துகொள்கிறார்கள். எங்களுக்கு வாக்குகள் குறைவு. ஆனால் எங்கள் திட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர்.

கேள்வி - ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வேட்புமனு வழங்க கட்சி விரும்புகிறதா?

 பதில் - அவர் கேட்பாரா? இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை.  சொல்லவும் இல்லை. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. அதன் பிறகு திருடர்களைப் பிடிக்க முடியும்.

 கேள்வி - கம்பஹாவுக்கு பிரதமர் பதவி கிடைக்க இருப்பதாக ஒரு கதை அடிபடுகிறது.

பதில் - தினேஷ் குணவர்தன, பிரதமராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். எனவே, அந்த நிலையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நாம் இப்போது பொருளாதாரத்தை வலுப்படுத்தப் பார்க்கிறோம். இது ஒரு தேசிய பிரச்சினை. அதனால், தேவையில்லாத பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.

கேள்வி - பிரதமர் பதவி வேண்டாம் என்று ஏன் கூறுகிறீர்கள்?

 பதில் - நான்  எனது விரல் அளவுக்கு வீங்கும் மனிதன். நான் பதவி கேட்டு அலைபவன் அல்ல. 

கேள்வி- மொட்டுக் கட்சியில்  உங்களுக்கு எதிர்ப்பு ஏதும்  இருக்கிறதா? அதிகம் பார்க்கவில்லை.

பதில் - அப்படி எதுவும் இல்லை, நான் மாநாட்டில் இருந்தேன். கம்பஹாவில் மொட்டுக் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் உள்ளேன்.

கேள்வி - தனது அரசாங்கத்தின் கீழ் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதாக ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்?

 பதில் - அவர்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும்.  போராட்டத்தில் இருந்தவர்கள் விபச்சாரிகள். ஆனால் ஜே.வி.பி இவ்வாறு கூறுவது விபச்சாரிகளுக்கும்  அவமானம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .