2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஹோட்டலில் கத்திக்குத்து: சந்தேகநபர் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோட்டலில் இருந்தவரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு சந்தேகநபர் தப்பிச்சென்ற சம்பவம், மினுவாங்கொடை பகுதியில்  இன்று புதன்கிழமை (07), அதிகாலை 12.10க்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், மினுவாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான, இசுறு ஜனித் கொடிதுவக்கு என்பவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பொலிஸார் இனங்கண்டுள்ளதுடன், அவர் அப்பகுதியை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினைப் பொலிஸார் முன்னெடுத்துவருவதாகவும் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X