2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஆஸி செல்ல முற்பட்ட 9பேர் கைது

Menaka Mookandi   / 2013 ஜனவரி 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத், கஜன்

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முட்பட்டார்கள் சந்தேகத்தின் பேரில் 9 இளைஞர்கள் திருகோணமலை பொலிஸாரல்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இவர்களை திருகோணமலை தலைமையக பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற அனாமதேய தொலைபேசி அழைப்பைத் தொடாந்து திருகோணமலை சில்வர் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் அங்கிருந்து கொழும்பு சென்று கொழும்பிலிருந்த திருகோணமலையை நோக்கி வந்திருந்தார்கள். இவர்களது பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதன் ஒரு காரணமாக மேலதிக விசாரணைக்காக  பொலிஸார் இவர்களைத் தடுத்து வைத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .