2025 ஜூன் 25, புதன்கிழமை

'பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த 150பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'

Thipaan   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

 
கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு, வீதி ஒரங்களில் நின்று தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்துக்  கொண்டிருந்த 150 இளைஞர்கள் கடந்த ஆறு மாத காலத்துக்குள் கைது செய்யப்பட்டு, அவர்களின் பெறN;றார்களின் முன்னிலையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா, மூதூர், சம்பூர் ஆகிய பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியேட்சர் புத்திக சமரபால, நேற்று சனிக்கிழமை (13)தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா, குட்டிக்கராச் மற்றும் மாலிந்துறை கிராம சேவகர் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
பிரதி பொலிஸ் அத்தியேட்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இவர்களில் அதிகமான இளைஞர்கள் மௌலவிமார்கள் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் என்பதே ஆச்சரியமான விடயமாக இருக்கிறது.

பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையிலான உறவு சிறப்பாக இருக்கின்ற போதுதான் சமூக விரோதச் செயல்களை இலகுவாக இனங்கண்டு அவற்றை கூடிய விரைவில் கட்டுப்படுத்த முடியும்.
 
கிண்ணி;யா பிரதேசத்தில் களவு தொடர்பாக இவ் வருடத்தில் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் வீட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்தே களவுகள் நடந்தாக அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த களவுகளுக்கு உள்ளூர் நபர்களா அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா பொறுப்பு என்பதை இனங்காண வேண்டியிருக்கிறது. எனவே, ஊருக்குள் புதியவர்கள் தொடர்பில் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் அவதானமாக இருந்து பொலிஸாருக்குத் தகவல்களைத்  தெரிவிக்க வெண்டும்.
 
கிண்ணியாவைப் பொறுத்த மட்டில் நாட்டில் எங்கேயுமே காணப்படாத இளைஞர்கள் இங்கு செறிந்து காணப்படுகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டல்களை பெற்றோர் செய்ய வேண்டியிருகிறது.

ஆனால், இது குறித்து பெற்றோர் சிந்திப்பதில்லை. மாறாக வீட்டில் தங்கி வாழும் இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு பெற்றோலும் ஊற்றிக் கொடுக்கிறார்கள். அலைபேசி வாங்கிக் கொடுத்து அதற்கு சிம்மும் வாங்கிக்கொடுப்பது மாத்திரமன்றி கணக்கை மீள்நிரப்பியும் கொடுக்கிறார்கள்.
 
இதனால் அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுகிறார்கள். கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் இளைஞனொருவன் மின் கம்பம் ஒன்றில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்தான். அவனிடம் வாகன அனுமதிப் பத்திரமோ ஓட்டுனர் அனுமதிப்பத்திரமோ இருக்கவில்லை. தலைக்கவசம்கூட அணிந்திருக்கவில்லை. இதற்கு யார் பொறுப்புதாரி?
 
எனவே, சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இந்த விடயங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 
சிவில் பாதுகாப்புக் குழு இன்று தேசிய ரீதியில் சிறப்பாக இயங்கி வருகின்றது. டெங்கு ஒழிப்பு, சிரமதானம், பாடசாலை மாணவர்களுக்கான வீதி போக்குவரத்து விதி முறைகள் குறித்த செயலமர்வுகள் போன்ற பல விடயங்களை சிவில் பாதுகாப்பு குழு ஊடாக பொலிஸார் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .