2025 மே 10, சனிக்கிழமை

மழையால் குளங்களின் வான்கதவுகள் திறப்பு; 4,000 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழையைத் தொடர்ந்து கந்தளாய்க்குளம், பரவிப்பாஞ்சான்குளம், ஈச்சங்குளம் கல்மிட்டியாக்குளம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மழையைத் தொடர்ந்து இக்குளங்கள் நிரம்பியுள்ள நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இக்குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், கிண்ணியா ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இந்நிலையில்,  இக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சுமார் 3,000 ஏக்கர் வயல்நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X