2025 மே 10, சனிக்கிழமை

ரிஸானா விவகாரம்; ஒருவருக்கு 7 வருட சிறை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டின் ஊடாக திருகோணமலையைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்பவரை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கு ஒத்துழைப்பு நல்கினார் என்று கூறப்படும் ஒருவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு நல்கினார் என்று கூறப்படும் அப்துல் சலாம் என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 7 வருட சிறைத்தண்டனையை நேற்று திங்கட்கிழமை விதித்ததுடன் 10 ஆயிரம் ரூபாவையும் தண்டமாக விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி குமுதினி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் அதி குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிர்வரும் ஜனவரிமாதம் தண்டனை விதிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சந்தேகநபர்களும் கடந்த 15 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கைக்குழந்தையை கொலைச்செய்தார் என்ற குற்றச்சாட்டில்  ரிசானா நபீக்குக்கு சவுதி நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X