2025 ஜூன் 12, வியாழக்கிழமை

'தீர்க்கப்படாத காணிப்பிரச்சினைகள் பல இருக்கின்றன'

Thipaan   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

'திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் தீர்க்கப்படாத காணிப்பிரச்சினைகள் பல இருக்கின்றன. அதனை குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தீர்த்து வைத்ததாகத் தெரியவில்லை. அதனை இனிமேலாவது தீர்த்து வைப்பதற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு முன்வர வேண்டும்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.துரைரட்ணசிங்கம், இம்ரான் மகரூப் ஆகியோரின் தலைமையில் நேற்று (12) இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 

'வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர் குச்சவெளி பிரதேசத்தில் காணிகளை கையகப்படுத்துகின்ற நிலை காணப்படுகின்றது. இது சம்மந்தமாக விசாரணை செய்து இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அத்தோடு, குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த பிரச்சினையோடு தொடர்பான அதிகாரிகளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காணமுடியாதுள்ளது.

எனவே, இது சம்மந்தமாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர், மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தி குறித்த அதிகாரிகளையும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கு கொள்ளச் செய்தால் நன்றாக இருக்கும்' எனவும் தெரிவித்தார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஜே.ஜனார்த்தனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13