2025 மே 17, சனிக்கிழமை

விபத்தில் நால்வர் கைது: சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் பிரிவில் கடற்படையினரின் உழவு இயந்திரம் இன்று வெள்ளிக்கிழமை காலை  குடைசாய்ந்ததில் 04 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தை அடுத்து உழவு இயந்திரச் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா உப்பாறுக் கடற்படை முகாமிலிருந்து திருகோணமலை தலைமையக முகாமுக்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் அதே முகாமில் கடமையாற்றும் வை.ஜி.ஜி.எஸ்.பண்டார (26 வயது), ஏ.என்.எம்.பீ.சில்வா (20 வயது), ஜி.ஏ.எஸ்.உபசேன (27 வயது) மற்றும் எஸ்.எம்.ஜெயரெட்ண (27 வயது) ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .