2025 ஜூலை 09, புதன்கிழமை

ரயிலின் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)

கல்லோயாவிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து  இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.20 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கந்தளாய் புகையிரத நிலைய அதிபர் எஸ்.எம்.சேனாதீர தெரிவித்தார். 

சேருவளையைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க நதீகமகே சுஜீவ புஷ்பகுமார என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .