2025 ஜூலை 28, திங்கட்கிழமை

திருமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் நவராத்திரி கலைவிழா

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி இந்து மாணவர் மன்றம் நடத்திய நவராத்திரி கலைவிழா நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நிக்கொட் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை பிரதம அதிதியாக இதில் கலந்து கொண்டார்.

நவராத்திரி விழாவை ஒட்டி மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு  கிழக்கு மாகாண முன்னாள் மேலதிக கல்வி பணிப்பாளரும், சாகித்திய மண்டல பரிசு பெற்றவருமான கேணிப்பித்தன் ச.அருளானந்தம்  பாராட்டப்பட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராசா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் சீ.ஜீவரெத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தனர்.

மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இங்கு அரங்கேற்றப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X