2025 மே 03, சனிக்கிழமை

உளவளத்துணை தொடர்பான கருத்தரங்கு

Kogilavani   / 2012 மார்ச் 08 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் தள வைத்தியசாலையினால் ஓழுங்கு செய்யப்பட்ட உளவளத்துணை தொடர்பான கருத்தரங்கு  நேற்று புதன்கிழமை மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மூதூர் தளவைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் வீ.பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தலைமை வளவாளராக உளவியல் நிபுணர் டாக்டர் பி. பிரபாத் விக்ரம கலந்து கொண்டு மறதியும் மனவெழுச்சியும், மறதிக்கான காரணம், ஞாபக சக்தியை  மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் முதலான விடயங்களில் விரிவாக விளக்கமளித்ததோடு, மாணர்களின் உளநெருக்கீடுகளைப் போக்குவதற்கு ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

இக்கருத்தரங்கில் அதிபர் ஜே.எம். இக்பால், தாதிய உத்தியோகத்தர் ஏ.டபிள்யு.முபாரக், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு முக்கியஸ்தர் எஸ்.எம்.தஸ்லீம், உட்பட மூதூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை உயர்தர மாணவர்களோடு உளவளத்துணை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Nawfal Thursday, 08 March 2012 11:32 PM

    நல்ல ஒரு முயற்சி. இன்னும் பல கருத்தரங்குகள் செய்யவேண்டும். Doctor பிரபாத் vantha பின்பு ula noyalarkalin paramarippil திருகோணமலை மாவட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சாதி மத pethaminri கடமையாற்றும் நல்ல மனிதர்.

    Reply : 0       0

    J.M. Azhar Friday, 09 March 2012 08:36 PM

    அத்தியகட்சகருக்கு எமது வாழ்த்துக்கள். சிறந்தவொரு முற்போக்குவாதி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X