2025 மே 02, வெள்ளிக்கிழமை

திடீர் அனர்த்தங்களை கையாளும் வகையில் அறிவூட்டும் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2012 மே 17 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

இயற்கை அனர்த்தங்களான  சுனாமி, புயல,; பெருவெள்ளம் போன்றவற்றினால்; ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளை கையாளுவதற்காக பொதுமக்களுக்கு அறிவூட்டும் பயிற்சிநெறி திருகோணமலையில் கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பயிற்சிநெறி, திருகோணமலை நகரக் கடற்கரையிலும் எகெட் கரித்தாஸ்; நிலைய மண்டபத்திலும் நடைபெற்றது. 

திருகோணமலையின் கரையோரப் பிரதேசங்களான நிலாவெளி, வேலூர், இலுப்பைக்குளம், சிறிமாபுர பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 பொதுமக்கள் பங்குபற்றினர்.  இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி எம்.எ.முஜாகிர் கருத்துரைகளையும் செயன்முறை பயிற்சிகளையும் வழங்கினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X