2025 ஜூன் 28, சனிக்கிழமை

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நீர் தாங்கிகள் வழங்கல்

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியா பிரதேச சபை பரிவில் வரட்சியினால் ஏற்பட்டும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை நீர் தாங்கிகள் வழங்கப்பட்டன.

பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுல்லாவின் வேண்டுகோளுக்கிணஙக மணிக்க கல் வியாபார நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சரத் சமரக் கோனினால் இந்த நீர் தாங்கிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த நீர் தாங்கிகள் மிகவும் வரடசியினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச சபை பிரிவிக்குட்பட்ட கச்சக் கொட்டத்தீவு, ஆயிலியடி, வாணாறு, நடு ஊற்று, சூரங்கல், மாகாமாறு, புது குடியிருப்பு, மணியரசங்குளம் மற்றும் வட்டமடு போன்ற கிராமங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியாவிற்கு விஜயம் செய்த சுற்றாடல் மற்றும் இயற்கை வள அபிவிருத்தி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவினால் குறித்த நீர் தாங்கிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. கிண்ணியா பிரதேச சபை பிரிவிலுள்ள 34 முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வகைளும் இதன்போது வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .