2025 மே 07, புதன்கிழமை

திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும்: சம்பந்தன்

Super User   / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் திவிநெகும சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் சமர்பிக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள்,; மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று புதன்கிழமை மாலை உரையாற்றுகையில் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களை மத்திய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கோள்ளப்படுவதற்கு திவிநெகும சட்டம் அனுமதிக்கின்றது.

மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் படி வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை பெறுவதற்காக போராடுவோம் என்று கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களிப்பார்களா?" எனவும் சம்பந்தன் கேள்வி எழுப்பினர்.

கிழக்கு மாகாண சபையின் அங்குரார்ப்பண அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. மறுநாள் திங்கட்கிழமை திவிநெகும சட்டமூலத்திற்கு சபையில் அங்கீகாரம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

You May Also Like

  Comments - 0

  • Mohan Thursday, 27 September 2012 04:14 PM

    ஏதோ பண்ணுக சார். உங்களை முடிந்தவரை
    நன்மை கிடைத்தல் சரி... அதுதான் தேவை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X