2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Super User   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மாற்றுக் கொள்கைக்கான நிலையமும்  தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி அமைப்பும் இணைந்து நடாத்திய மொழி  உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று புதன்கிழமை கந்தளாயில் இடம்பெற்றது.

கந்தளாய் சர்வோதய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளார்களும் மற்றும் மொழிச்சங்கங்களின் பிரதம அலுவலகர்களும்;  கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கின் விசேட வளவாளராக சட்டத்தரணி எஸ்.ஜீ.புங்சிஹேவா, லயனல் குருகே ஆகியோரோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.பண்டாரயும் கலந்துகொண்டு மொழி உரிமைகள் சம்பந்தமாக விரிவான விளக்கங்களை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .