2025 மே 08, வியாழக்கிழமை

திருகோணமலையில் தொடர்ந்து மழை; பாதிக்கப்பட்ட இடங்களை கிழக்கு முதலமைச்சர் பார்வை

Super User   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூர் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாழ்நில குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி வருகின்றன. கடல் கொந்தளிப்பினாலும் மழை வீழ்ச்சியனாலும் மூதூர் கரையோர கிராமங்கள் சிலவற்றில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. அத்துடன், தொடர்; மழையினால் சுமார் 12,000 மேற்பட்ட நெல் வயல்கள் நீரில் முற்றாக மூழ்கியுள்ளன.

கடற்றொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் முதலானோர் இந்த சீரற்ற கால நிலையினால்; மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தினால் மூழ்கிய பிரதேசங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் நேரில் சென்று பார்வையிட்டதுடன் நிவாரணங்களை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X