2025 மே 08, வியாழக்கிழமை

கந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குளம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் பண்டார தெரிவித்தார்.

மேற்படி குளத்தில் பொதுமக்கள் மாணிக்கக்கல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதால் குளத்துக்கு சேதமேற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் ஆயிரம் பேர் மேற்படி குளத்தின் கரையில் இருந்து மாணிக்கக்கல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக குளத்தில் மாணிக்கக்கற்கள் தோன்றியிருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து அப்பகுதி மக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தொடர்புடைய செய்திகள்...

மழையில் மாணிக்கம் தேடும் மக்கள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X