2025 ஜூன் 28, சனிக்கிழமை

எதிர்காலத் தேவைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


'கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவை' என்னும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சும் இணைந்து  இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம், நீர்வழங்கல், விவசாயம், மீன்பிடி, கால்நடை, கிராமிய கைத்தொழில் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான ஆலோசனைகளை அமைச்சர்கள் முன்வைத்தனர்.

வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஹாபிஸ் நசீர் உட்பட அமைச்சுக்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .