2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், கஜன்)

திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கினங்க பிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 27பேரும் இன்று மாலை இலங்கை கடற்படையின் வழித்துணையுடன் தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டனர்.

சென்ற 23ஆம் திகதி திருகோணமலை, புல்மோட்டை கடற்பரப்பில் கடல் எல்லையை மீறி வந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் தமிழக மீனவர்கள் 27பேரும் நான்கு மீன்பிடிப்படகுகள் சகிதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

24ஆம் திகதி முதல் இலங்கைக்கான இந்திய தூதுவராலய அனுசரணையுடன் திருகோணமலை வை.எம்.சீ.ஏ. நிறுவன மண்டபத்தில் இந்திய மீனவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .