2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குடும்பத் தலைவிகளுக்கு சுயதொழில்

Menaka Mookandi   / 2013 ஜூலை 12 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வறுமைக் கோட்டின்கீழ் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் மாதாந்தவருமானத்தை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில இயங்கும் முனைப்பு நிறுவனம் திருகோணமலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு சுயதொழில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருகோணமலையில் அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் மாதம் ஒருகுடும்பத்தலைவிக்கு சுயதொழில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அநத வகையில் குடும்பத்தலைவி ஒருவருக்கு உதவிகள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.

ஏடு சர்வதேசம் ஏடு இலங்கை (திருகோணமலை மாவட்டம்) அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இச்செயற்திட்டத்தின் மூலம் காலப்போக்கில் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .