2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்கில் ஐவருக்கு பிரதீபா பிரபா விருதுகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன், எஸ்.எச்.அமீர்

ஜனாதிபதியினால் வழங்கப்படும் சிறந்த அதிபருக்கான பிரதீபா பிரபா விருது 3ஆவது முறையாகவும் மட்.நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வவுணதீவு விளாவட்டுவானைச்சேர்ந்த தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை அவர்களுக்கே இவ்விருது கிடைத்துள்ளது.
இதேவேளை, மூதூர் கல்வி வலயத்தைச் சேர்ந்த நால்வருக்கு 'பிரதீபா பிரபா' விருதுகள் கிடைத்துள்ளன.

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் தேசிய கல்வி நிறுவகத்தில் கடந்த 5ஆம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்ட  விருது வழங்கும் விழாவின் போதே மூதுரைச் சேர்ந்த அதிபர்கள் இருவருக்கும் ஆசிரியர் இருவருக்கும் இவ்விருதுகள் கிடைத்துள்ளன.

பாடசாலையை சிறப்பாக நிர்வகித்து வெற்றியின்பால் இட்டுச்சென்றமைக்காக மூதூர் ஆயிஷா வித்;தியாலய அதிபர் ஜே.முஹமட் மாஹிர், தோப்பூர் பாத்திமா மகளிர் மகா வித்தியாலய அதிபர் பி.எம்.மர்சூக் ஆகியோருக்கும் மற்றும் சிறப்பான கல்விப் போதனை மூலம் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்தமைக்காக மூதூர் அல்மினா வித்தியாலயத்தின் ஆசிரியர் டபிள்யூ.எம்.சிறாஜுதீன், மூதூர் அந் நஹார் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியை மஸீனா நளீர் ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்துள்ளன.

நாமகள் வித்தியாலய அதிபர்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .