2025 ஜூன் 25, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 03 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கிண்ணியா பிரதேசத்திலுள்ள தள வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியில், வைத்திய விசேட நிபுணர்களுக்கான விடுதிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வேண்டு கோளுக்கிணங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.முகம்மட் மன்சூர் இதற்கென 18 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.

கிண்ணியா தள வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச். சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.முகம்மட் மன்சூர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.லாகீர், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் டொக்டர் எம்.ஹில்மி மஹ்ரூப் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணுகரன் பிராந்தி உதவித் தவிசாளர்கள் வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது திருகோணமலை மாவட்ட காரியலாயம் ஒன்று அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .