2025 ஜூன் 25, புதன்கிழமை

இரத்ததான நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.அப்துல் பரீத்


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்  திருகோணமலை கிளை மற்றும் கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு என்பன ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு, திஃ கிண்ணியா அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் இன்று (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிண்ணியா ஆதார வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச்.ஏம்.சமீம் , தோப்பூர் இராணுவ முகாம் லெப்.கேணல் திலக், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர் என். ரவிச்சந்திரன், கிண்ணியா அப்துல் மஜீது வித்தியாலய ஆசிரியர் ஏ. எல். அஷ்ரப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இப்பிரதேச பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் காணி மீள் நிரப்பு நகர அபிவிருத்தி திணைக்களத்தின் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .