2025 ஜூன் 25, புதன்கிழமை

யானை தாக்கி விவசாயி பலி

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை  மாவட்டம் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் இலிங்கபுரம் கிராமத்தில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியாகி உள்ளார். 

குறித்த நபர் வயல் காவலுக்கு சென்றிருந்த போது இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானை தாக்குதலில் மரணமடைந்தவர் க.விநாயகம் வயது 56 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரினட சடலம்  சேருநுவர வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .