2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மூதூர் கிழக்கில் தனிக் கல்விக் கோட்டத்தை அமைக்க கோரிக்கை

Sudharshini   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


திருகோணமலை, மூதூர் கிழக்குப் பிரதேசத்திலுள்;ள 30க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகளை இணைத்து தனியானதொரு கல்விக் கோட்டத்தை அமைத்துதருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர். ராதாகிருஷ்ணனிடம், கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அதன் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா இன்று வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.


இது தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் கிழக்குப் பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெருநிலப் பகுதியாகும். இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள் உள்ளன.


இப்பாடசாலைகள் அனைத்தம் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. பாடசாலைகளுக்கான வளப்பகிர்வுகளும் ஒழுங்காக மேற்கொள்ளப்படுவதில்லை.


எனவே, மூதூர் கிழக்கில் தனியானதொரு கோட்டம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் அப்பிரதேச அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காணமுடியும்.


இந்த வேண்டுகோளை அக்கறையோடு பரிசீலித்து இப்பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .