2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தாம்போதி பால அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

Thipaan   / 2015 மார்ச் 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை- கல்முனை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதி பாலத்தை 300 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்திப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐம்பது வருடம் பழைமை வாய்ந்த இந்த தாம்போதி  கடந்த அரசின் காரைதீவு தொடக்கம் சியம்பலாண்டுவ வீதியின் புனரமைப்பின் போது அபிவிருத்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்த போது, தாம்போதியின் மேல் நான்கடி நீர் பாய்ந்து கொண்டிருப்பதை கண்ணுற்ற அவர் இந்தப் பாலத்தின் விவரங்களை முழுமையாக கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதியால், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்த தாம்போதி பாலம் 300 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

இந்த தாம்போதியின் 50 வருடகால வரலாற்றில் மழைகாலத்தில் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் பல நாற்றுக் கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் நினைவு கூரக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.

தற்போதுள்ள பாலத்தின் மட்டத்திலிருந்து 4 அடி உயத்தையும் 63 மீற்றர் நீளத்தையும் கொண்ட நவீன பாலத்தின்; நிர்மாணப் பணிகளை அரசு டபிள்யூ.எம்.பி என்ற நிறுவனத்திடம் ஒருவருட கால ஒப்பந்தத்துக்கு வழங்கியுள்ளதாக ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்தப் பாலத்தை நிர்மாணிப்பானது இந்த மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒருவரப்பிரசாதமாகும் அதனால் இந்த அரசுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .