Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 27 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களில் பட்டதாரிகளை உள்வாங்கி அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிழக்கு மாகாண பட்டதாரிகளின் மட்டும் தொடர்ந்தும் இந்த விடயத்தில் புறக்கணிகப்பட்டுவருகின்றனர். இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தி அவர்களுக்கு நீதி பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு நேற்று (26) அனுப்பி வைத்துள்ளது.
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தின் தலைவர் றஹ்மதுல்லா அன்சார். மற்றும் அதன் செயலாளர் அப்துல் குத்தூஸ் முகமட் நாஜிர் ஆகியோரால் ஒப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள், வேலை வாய்ப்பை பெற்றுத்தரக் கோரி கடந்த 2015.05.27ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை கிண்ணியாவில் ஏற்பாடு செய்திருந்தோம்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல்வேறு மன உளைச்சல்களுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம்.
கிழக்கு மாகாணத்தில் பல்லேறு சந்தர்ப்பங்களில் ஆசிரிய நியமனத்துக்கான விண்ணப்பஙகள் கோரப்பட்ட நிலையிலும் வெற்றிடமில்லை என்ற பொய்க் காரணங்களைக் கூறி எமது வேலையற்ற பட்டதாரிகளை 'பட்டகாலிலே படும். சுட்ட புண்ணிலே சுடும்' என்ற நிலைக்கு ஆளாக்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையை கடந்த காலங்களில் இந்த மாகாண சபை மேற்கொண்டது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் 1920 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுவதாகக் கூறும் இவர்கள் இதற்கு முன்னர் நியமணங்கள் வழங்கும் போது இத்தகவல்களை மூடி மறைத்தமைக்கான பின்னணி என்ன?
இவ்வெற்றிடங்கள் கடந்த காலங்களில் ஆசிரிய விண்ணப்பங்கள் கோரப்படும் போது வெளிக் கொணரப்பட்டிருந்தால் நிச்சயமாக கிழக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் 90 சதவீதமாக குறைந்திருக்கும்.
ஒரு சில அரசியல் சுயநலமிகளினதும் சமூக அக்கறையற்ற அதிகாரிகளினதும் தான் தோன்றித் தனமான இவ்வாறான நடவடிக்கைகளை திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
'ஏற்கெனவே பட்டதாரிகளாக உள்வாங்கப்பட்டவர்களுக்கென விண்ணப்பங்கள் கோருவதைத் தவிர்த்து வேலையற்ற பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்' என்ற அடிப்படையில் இனிவரும் காலங்களிலாவது விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையை தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றோம்.
ஏனெனில,; ஏற்கெனவே தொழிலிலுள்ளவர்கள், தாங்கள் வகிக்கும் தொழிலை விட்டு விட்டு புதிய தொழிலில் இணைகின்ற போது, அவர்கள் ஏற்கெனவே இருந்த தொழில் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அரசுக்கு பல்வேறு செலவுகளும் வீண்விரயங்களும் எற்படும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே, வேலையற்ற பட்டதாரிகளின் வெற்றிடங்கள் நிரப்பப்படும் வகையில், ஏற்கெனவே சேவையில் உள்ளவர்கள், திணைக்கள தலைவருடாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுடனான விண்ணப்பங்கள் கோருவதை கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு நிறுத்த வேண்டும்.
அத்தோடு, விண்ணப்பங்கள் கோரும் போது 30 அல்லது 35 வயதுக்கு குறைந்தவர்களே விண்ணப்பிக்கலாம் என வயது மட்டுப்படுத்தப்படுவதானது கவலையளிக்கிறது.
ஏனெனில், கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக்கில் ஏற்பட்டிருந்த கோர யுத்தத்தினால் இம் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கல்வியைத் தொடர முடியாத நிலை காணப்பட்டது.
தற்போது யுத்தம் நிறைவடைந்து 06 ஆண்டுகளுக்குள்ளேயே அனேகமானோர் தங்களது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளனர். 35 வயதென்பது எமது மாகாணங்களைப் பொறுத்த வரையில் அதிகமானவர்களுக்கு எட்டாக் கனியே.
இவ் வயதுகட்டுப்பாட்டை குறைந்தது 40 வயதாக்க வேண்டும். இவ்வாறின்றி இந்நிலைமை தொடருமானால் தற்போது இருக்கின்ற வேலையற்ற பட்டதாரிகள் அனவருக்கும் கிழக்கு மாகாண சபையே பொறுப்புக் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் அனுபவித்து அதிலிருந்து விடுபடாத நிலையில், புதிய தேசிய அரசாங்கத்திலாவது எமக்கு விமோசனம் கிடைக்கும் என்ற அவாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான பங்காளிகளாக இளைஞர்களும் பட்டதாரிகளும் காணப்பட்ட நிலையில் பட்டதாரிகளை புறந்தள்ளி வேடிக்கை பார்க்க வைப்பது வேதனையளிக்கின்றது.
அண்மையில், தேசியப் பாடசாலை ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், ஏற்கெனவே பட்டதாரிப் பயிலுனர்களாக உள்வாங்கப்பட்டிருந்த பட்டதாரிகளே விண்ணப்பிக்க முடியும் என்ற வாசகத்துடன் கோரப்பட்டிருந்தமை அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஆக்ரோச நிலைக்கு இட்டுச் செல்லும் விடயமாகவே நாங்கள் கருதுகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago