2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புத்தகப்பைகளும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூன் 01 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கந்தளாய் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கும் நிகழ்வு ஆயிஷா மகளிர் மஹா வித்தியாலய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.

த குளோபல் பண்ட் த சில்றன் அனுசரணையில் கந்தளாய் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பின் (றெக்டொ) ஏற்பாட்டில், அமைப்பின்   தலைவர் ஜே.எம்.அஸார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காணி அமைச்சருமான எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்த்தன பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பொதிகளை வழங்கிவைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .