2025 ஜூன் 28, சனிக்கிழமை

27 இந்திய மீனவர்களும் பிணையில் விடுதலை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன், அமதோரு அமரஜீவ)


இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 27பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தனிநபர் பிணையில் இவர்களை விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் அஸ்ஹர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு  கடற்பிராந்தியத்தில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்படி மீனவர்கள் 27பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆத்துடன், இவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்களை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து அவர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .