Suganthini Ratnam / 2017 ஜூன் 20 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் 7 மீனவர்களை கடற்படையினரின் உதவியுடன் கடற்றொழில் திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (19) மாலை கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மூதூர், கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் உதவி திட்ட பணிப்பாளர் ஈ.எம்.சீ.போயகொட தெரிவித்தார்.
திருகோணமலை கடற்பரப்பில் இறால் குழி எனும் இடத்திலே வைத்து படகொன்றினையும் மீன்பிடி வலைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எதிர்வரும் ஜுலை முதல் வாரத்தில் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இம்மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.சீ.போயகொட தெரிவித்தார்.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026