Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 10 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே தெரிவித்தார்.
திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக ஆர்ப்பாட்டமொன்று பெற்றோர்களினாலும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், ;அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயம், இலந்தைக்குளம் வித்தியாலயம் ஆகியவற்றிலேயே ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு 08 ஆசிரியர்களையும் அந்நூரிய கனிஷ்ட வித்தியாலயத்துக்கு 04 ஆசிரியர்களையும் இலந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயத்துக்கு 04 ஆசிரியர்களையும் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்பாக நியமிப்பதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago