2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆடை விற்பனை நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

நோன்பு பெருநாளைக்காக துணி, ஆடை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற புடவைக் கடை உரிமையாளர்கள் பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்ளுமாறு, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம்.எம்.அஜித் அறிவித்தல் விடுத்துள்ளார்.

- தங்களது ஆடைக் கடைகளுக்கு முன்னால் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவுவதற்கான ஏற்பாடுகளை செய்தல்.

- கடைகளுக்கு முன்னால் சுகாதார வழிமுறைகளை மக்களை கடைப்பிக்கச் செய்வதற்கு பொறுப்பான ஒருவரை நியமித்தல்.

- ஆடைகளை விற்பனை செய்பவர்கள் முகக்கவசம், கையுறைகளை கட்டாயம் அணிந்திருத்தல்.

- முகக்கவசம் அணிந்தவர்களை மாத்திரம் கடைகளுக்குள் அனுமதித்தல்.

- கடைகளுக்கு வரும் மக்களுக்கிடையில் சமூக இடைவெளியை கட்டாயம் பேணல்.

- சிறிய கடையாயின் ஒரே நேரத்தில் 5 நபர்களையும் பெரிய கடையாயின் 10 நபர்களையும் மாத்திரம் அனுமதித்தல்.

- கொள்வனவுக்கென, ஒரு வாடிக்கையாளருக்கு 20 நிமிடங்கள் மாத்திரம் கால அவகாசம் வழங்குதல்.

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை பேணி நடக்காத ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அவர் மேலும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X