2025 ஜூன் 07, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 08 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, எப்.முபாரக்         

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி திருகோணமலை, புல்மோட்டைப் பிரதான வீதியிலுள்ள குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குச்சவெளி பிரதேசத்திலுள்ள அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 616 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைக்கு 36 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றபோதிலும், 21 ஆசிரியர்கள் உள்ளனர். அந்நூரியா கனிஷ்ட பாடசாலையில் 283 மாணவர்களுக்கு 22 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றபோதிலும், 05 ஆசிரியர்களே உள்ளனர்.

இலந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் 97 மாணவர்கள் கல்வி கற்கின்ற நிலையில் 07 ஆசிரியர்கள் தேவையான நிலையில் 03 ஆசிரியர்களே உள்ளதாக பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கா விட்டால் தொடர்ந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இன்றையதினம் கல்வி திணைக்களத்தினால் தீர்வு கிடைக்காததால் நாளை புதன்கிழமை பாடசாலையின் கதவுகளை பூட்டி ஆசிரியர்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்களும் அபிவிருத்தி குழுவின் செயலாளருமான எஸ்.எம்.நிஹால் தெரிவித்தார்.

அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாக திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர் -என்.விஜேந்திரனுடன்  தொடர்புகொண்டு கேட்டபோது அமைச்சருடனும் அமைச்சின் செயலாளருடனும் பேசி சிறந்த தீர்வினை பெற்று கொடுப்பதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .