2026 மார்ச் 21, சனிக்கிழமை

இடிமண் வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீசான் அஹமட்

கிண்ணியா குட்டிக்கராச்சி சந்தியில் இருந்து ஆலங்கேணி வரையான 1.8 கிலோமீற்றர் நீளமான இடிமண் பிரதான  வீதியின் புனரமைப்பு வேலைகள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால், நேற்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தௌபீக் எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் 21 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலேயே, இப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்மூலம், இவ்வீதியை பயன்படுத்துகின்ற ஆயிரக்கணக்கான மக்கள் நன்மையடைவர் என தௌபீக் எம்.பி குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X