2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இருவேறு விபத்துக்களில் இருவர் காயம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது முச்சக்கரவண்டி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை, நீதிமன்ற வீதி, மனையாவெளியைச் சேர்ந்த எம்.குமரேந்திரன் (56 வயது) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில், நிலாவெளி, இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜெய்னுலாப்தீன் (65வயது) படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் முச்சக்கரவண்டியின் சாரதியைக் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .