2025 மே 07, புதன்கிழமை

இராணுவ வீரர்கள் இருவர் காயம்

தீஷான் அஹமட்   / 2018 மார்ச் 20 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை 05 ஆம் கட்டைப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, திருகோணமலைப் பொலிஸார்  தெரிவித்தனர்.

நேற்று (19) இடம்பெற்ற இச்சம்பவத்தில், திருகோணமலை 22ஆவது இராணுவப் படைப்பிரிவில் கடமையாற்றும் இரானுவ வீரர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X