2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை- இந்தியாவுக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் எரிபொருள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவில்  உள்ள நாகப்பட்டினத்திற்கும், திருகோணமலைக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பை  ஏற்படுத்துவது தொடர்பாகப்  கலந்துரையாடலொன்றை இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோருடன் இந்தியன் பெற்றோலிய கூட்டுறவின் செயற்பாட்டுத் தலைவர் மற்றும் இந்திய பெற்றோலிய அமைச்சின் அதிகாரிகள் க மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது உள்நாட்டு ரயில்வே பாதைக்கு  அருகாமையில் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இச்செயற்திட்டத்தின் ஊடாக  பொதுமக்களுக்கு  நன்மை பயக்கும் வகையில் எரிபொருள் விலையைக் குறைக்கக் கூடிய சாத்திய கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X