அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை பகுதியில் நேற்றிரவு (06) கத்திக்குத்துக்கு இலக்காகி, சாமி நகர் பகுதியைச் சேர்ந்த என்.எம்.சபான் (19 வயது) எனும் இளைஞன்,
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டு மைதானத்தில் வைத்து இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமே, இக்கத்திக் குத்துச் சம்பவத்துக்கு அடிப்படைக் காரணமென பொலிஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .