2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கந்தளாய் குளத்துக் கற்பாறைக்கு அருகில் கைக்குண்டொன்று, இன்று திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்துக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார், கைக்குண்டைப் பார்வையிட்டதுடன், அதனைச் செயலிழக்க நீதிமன்றத்தின் அனுமதியைப்பெறவுள்ளதாகத் தெரிவித்தனர்.

கைக்குண்டு இருக்கும் கற்பாறைக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .