Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 03 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.முபாரக்
இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக, போலியான காசோலையை வழங்கிய சந்தேகநபரை, இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்றுப் புதன்கிழமை (02) உத்தரவிட்டார்.
மன்னாரைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், திருகோணமலையிலுள்ள நபரொருவரிடமிருந்து படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக போலியான காசோலையை வழங்கி, படகைக் கொண்டு சென்றுள்ளார்.
படகின் உரிமையாளர், காசோலையை மாற்றுவதற்கு முயன்றபோது, காசோலை போலியானது எனத் தெரியவந்ததையடுத்து, திருகோணமலை குற்றத்தடுப்புப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரை செவ்வாய்கிழமை (01) கைது செய்த பொலிஸார், அவரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில், புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .