Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூன் 27 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை-மயிலவெவ பகுதியில், காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோர், கோமரங்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், கெப்பத்திகொலாவ, இஹலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த டி.சனத் பண்டார (34 வயது) மற்றும் அவரது மனைவியான எம்.நிரோஷா மல்காந்தி (31 வயது) எனவும் தெரியவருகின்றது.
இவர்கள் இருவரும், கெப்பித்தகொலாவ பகுதியிலிருந்து மீள்குடியேற்ற கிராமமான மயிலவெவ கிராமத்திலுள்ள உறவினரின் வீட்டுக்கு வருகை தந்ததாகவும் வீட்டுக்கு அண்மித்த பகுதியிலுள்ள குளத்துக்குச் சென்ற போது காட்டு யானை தாக்கியதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
23 minute ago
36 minute ago