Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 18 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, வான்எலப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியரசன் குளத்தில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த 43 வயது நபரொருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு 8.30க்கு கைதுசெய்துள்ளதாக வான்எலப் பொலிஸார் தெரிவித்தனர்.
மணியரசன் குளத்தில் ஒருவர் தனிமையில் இருந்து கஞ்சா சுருட்டு புகைப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இவரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் வான்எலப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .