2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா வியாபாரிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா,எப்.முபாரக்  

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரை கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 71 வயதுடைய ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி்.சரவணராஜா நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மேற்படி நபர் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச்சென்று சோதனை மேற்கொண்டபோது, அவ்வீட்டிலிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X