2025 ஜூன் 16, திங்கட்கிழமை

கஞ்சா வளர்த்த இளைஞன் கைது

Janu   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிறுபிட்டிகுளம்  பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்த  இளைஞர் ஒருவரை திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளித் தோட்டத்திற்குள்   கஞ்சா செடிகளை வளர்ப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த தோட்டத்தை சோதனையிட்டபோது எட்டு கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

முப்லிஹா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X