Editorial / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, அநுராதபுரச் சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்துக்குள் கேரளக் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், மாணவர்கள் மூவர், நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளனரென, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
காந்திநகர், மட்கோ ஆகிய இடங்களைச் சேர்ந்த 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago