2025 மே 17, சனிக்கிழமை

கடற்கொந்தளிப்பினால் 2 படகுகளும் 3 தோணிகளும் சேதம்

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் கடற்கரைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (06) இரவு ஏற்பட்ட கடற்கொந்தளிப்பினால், கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 படகுகளும் 3 தோணிகளும் சேதமாகியுள்ளன.

படகுகளின் ஒவ்வொரு பாகங்களும் வௌ;வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்;கு இன்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்த மூதூர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், படகுகள், தோணிகளின் இழப்பீடுகள் சம்ந்தமான தரவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

அதேவேளை இரண்டு படகுகளும் காப்புறுதி செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிறுவன அதிகாரிகளும் சேத விவரங்களைச் சேகரித்துச் செனறனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .