Suganthini Ratnam / 2017 ஜூலை 10 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மதவாச்சிப் பகுதியிலிருந்து கோமரங்கடவெலவுக்குப் பயணித்த காரொன்றை வழிமறித்துச் சோதனை செய்தபோது கத்திகள், இரும்புக்கம்பி மற்றும் தடிகளுடன் 5 பேரை ஞாயிற்றுக்கிழமை (9) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
27 வயது முதல் 47 வயதுவரையானவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கார் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து, அக்காரை வழிமறித்துச் சோதனையிட்டதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து 5 கத்திகளையும் இரும்புக்கம்பியையும் பொல்லையும் கைப்பற்றியதாகவும் கூறினர்.
16 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 Mar 2026