Thipaan / 2016 ஜூன் 05 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை கப்பல்துறைப் பகுதியிலுள்ள பதினேழு ஏக்கர் காணியில், இலங்கை மின்சார சபைக்குரிய, 220/33 கிலோவோட் மின் கட்டமைப்பு உப நிலையத்துக்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் திருகோணமலைக் கிளையின் அதிகாரியொருவர், சனிக்கிழமை (04) தெரிவித்தார்.
இந்நிலையத்தை அமைப்பதற்கு, கப்பல் துறை பகுதியில், இலங்கை மின்சார சபையினால் ஏற்கெனவே இணங்காணப்பட்ட காணியில் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மின்சார சபைக்கான இந்த உபநிலையம் அமைக்கும் பணிகள், இவ்வருட இறுதியில் நிறைவு பெறவேண்டியுள்ளதாகவும் மின்சார சபையின் அதிகாரி தெரிவித்தார்.



52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago